சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது!

சென்னை: சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து சங்கங்களின் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் அறிவித்திருந்தன. இதனையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.

இந்நிலையில், சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

 

The post சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: