பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்

 

பழநி, ஜன. 3: பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென வாசன் பாசறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட வாசன் பாசறை தலைவர் மணிக்கண்ணன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி வரும் பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

நகரில் உள்ள ஹோட்டல்களில் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை வேண்டும். திருவிழாக் காலங்களில் சிற்றுண்டி கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும். காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் பாதயாத்திரை வழித்தடங்களில் இரவு நேர ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பக்தர்களிடம் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

The post பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: