தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்த யாத்திரையின் நோக்கம் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் ஒருவர், மீனவர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை நடத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களை எடுத்து சொல்வதே ஆகும். எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தமிழக அரசிடம் அறிக்கை மூலம் தெரிந்த பிறகுதான் அது குறித்து முடிவு எடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்துறைகளை நிறுவவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என்று கூறினார்.
The post எண்ணூர் அமோனியா கசிவு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.