ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து இந்தியா கூட்டணி ஆலோசிக்கவில்லை: சஞ்சய் ராவத் தகவல்

மும்பை: மும்பையில் சிவசேனா (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர், தலைவர் குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. அக்கூட்டத்தில் கூட்டணியின் முகமாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். எனவே அனைத்து கட்சிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மூத்த தலைவர் இந்தியா கூட்டணியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்’’ என்றார்.

The post ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து இந்தியா கூட்டணி ஆலோசிக்கவில்லை: சஞ்சய் ராவத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: