ஓய்வு பெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம்: இணை பதிவாளருக்கு கோரிக்கை மனு

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வுபெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம், அந்தந்த மாதங்களுக்கு பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்திடவும், ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கிட ஆணை வெளியிட பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அதனை அமல்படுத்தும் விதமாக பணியாளர்களிடமிருந்து வயது வரம்பிற்கு உட்பட்டு மாத பிரீமியத் தொகை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post ஓய்வு பெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம்: இணை பதிவாளருக்கு கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: