பொன்மன வள்ளலுக்கு இறுதி மரியாதை!: விஜயகாந்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் பிரியா விடை..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிரியா விடை கொடுக்கின்றனர். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடன் விஜயகாந்திற்கு வழியனுப்பி வைக்கின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தில் தேமுதிக கட்சிக் கொடி ஏந்தி திரளான தொண்டர்கள் கண்ணீருடன் பங்கேற்றுள்ளனர். இறுதி ஊர்வலத்தின் பாதை சற்று மாற்றப்பட்டுள்ளது. முத்துசாமி சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்கிறது.

The post பொன்மன வள்ளலுக்கு இறுதி மரியாதை!: விஜயகாந்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் பிரியா விடை..!! appeared first on Dinakaran.

Related Stories: