அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன்,”ஒன்றிய அரசின் சார்பாக பிரதமர் மோடி என்னை அனுப்பிவைத்தார். கஷ்டங்களை பார்க்க முடியாத அளவுக்கு இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த். விஜயகாந்த் வீட்டிற்கு சென்றவர் உணவருந்தாமல் திரும்ப முடியாது. அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதை கொடுத்தவர் விஜயகாந்த். அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்,”எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “2014 தேர்தலில் மோடி பிரதமராக கடினமாக உழைத்தவர் விஜயகாந்த். பிரதமர் மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. தேமுதிகவை வெற்றிகரமாக பிரேமலதா நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.
The post அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது :ஓன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழஞ்சலி appeared first on Dinakaran.