சிலுவைபுரத்தில் கபடி போட்டி

குளத்தூர், டிச. 28: குளத்தூர் அருகே உள்ள சிலுவைபுரம் சிஎஸ்ஐ தூய லூக்கா ஆலய பிரதிஷ்டை, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 13ம் ஆண்டு அசன விழாவையொட்டி வாதிரியார் பேரவை சார்பில் 22வது ஆண்டாக ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 45 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பிடித்த சிலுவைபுரம் வெண்ணிலா கபடிக்குழு அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2வது இடம்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனூர் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, 3வது இடம் பிடித்த இ.வேலாயுதபுரம் தமிழன்னை அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. 4ம் இடம் பிடித்த நரிப்பையூர் நேதாஜி அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வாதிரியார் பேரவையினர் செய்திருந்தனர்.

The post சிலுவைபுரத்தில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: