இந்நடுகல்லில் வீரன் ஒருவன் வலக்கை மேலே தூக்கிய நிலையில், குத்து வாளால் குதிரையைக் குத்தும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். குதிரையின் மீது அமர்ந்துள்ள வீரன் இவனை ஈட்டியால் குத்துவது போல் காட்டப்பட்டுள்ளது. சிற்பத்திற்கு மேலே நான்கு வரிகளில் தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. சொக்கன் என்பவன் கருவாயன்பள்ளி என்ற ஊரில் நடந்த பூசலில் ஈடுபட்டுக் குதிரையைக் குத்தி இறந்துள்ளான் என்ற செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. நடுகற்களில், புலிக்குத்திப்பட்டான், மான்குத்திப்பட்டான், யானைக்குத்திப்பட்டான், பன்றிக்குத்திப்பட்டான், பாம்புக்குத்திப்பட்டான் என்று பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த குதிரைக்குத்திப்பட்டான் நடுகல். இவ்வாறு அவர் கூறினார்.
The post அரசு அருங்காட்சியகத்தில் 700 ஆண்டு பழமையான நடுகல் காட்சிக்கு வைப்பு appeared first on Dinakaran.