ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினரை தாக்கியவர் மீது வழக்கு

மேலூர், டிச. 27: ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சரவணன்(45). இவரை இதே ஊரை சேர்ந்த ஆறுமுகம்(35) முன் பகை காரணமாக தாக்கி காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக சரவணன் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தன்னை தாக்கி விட்டதாகவும், அதை தட்டி கேட்க வேண்டும் என குன்னாரம்பட்டி 4வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரனிடம் ஆறுமுகம் முறையிட்டுள்ளார். அது குறித்து பிறகு கேட்பதாக ராஜேந்திரன் கூறவே, இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரை தாக்கி கீழே தள்ளி விட்டார். இது குறித்து ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினரை தாக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: