திருவள்ளூர்: அம்பத்தூரில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் தம்பதியிடம் இருந்து 6 சவரன் தங்கச் சங்கிலி மர்மநபர் பறித்து சென்றார். சம்பவத்தின் போது காயமடைந்த தம்பதி, அரக்கோணம் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.