புதுடெல்லி: ஒன்றிய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில்,‘‘ அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற காலங்களில் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமாகும். 2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரால் ஐரோப்பாவில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது நாட்டில் உள்ள நகர்புறங்களில் சராசரி மின் விநியோகம் 23.50 மணி நேரம். கிராமப்புறங்களில் 22 மணி நேரமாக உள்ளது. பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலையங்கள் எந்த ஒரு புவிசார் அரசியல் சீர்குலைவுகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாக்கும். நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் மின் தேவை அதிகபட்சமாக 243.27 ஜிகாவாட் என்ற நிலையை அடைந்தது. இந்த சூழ்நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் ரூ.7.28 லட்சம் கோடியில் 91 ஜிகாவாட் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.
The post எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அனல் மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம்: மின்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.