இதுகுறித்து அறிந்த கரியப்பாவின் பெற்றோர் என்னை திட்டி, அவரிடமிருந்து விலகும்படி மிரட்டினர். மேலும் கடந்த 18-ம் தேதி கரியப்பா ‘‘நீங்கள் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என திட்டி மிரட்டினார்’’ என்று புகாரில் ெதரிவித்துள்ளார். மேலும் கரியப்பா போதை பொருள் பயன்படுத்தியதாகவும் அவரது காதலி போலீசில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகல்குண்டே காவல்நிலையத்தில் கே.சி.கரியப்பா அளித்த புகாரில், நான் முன்பு திஷாவுடன் தொடர்பு வைத்திருந்தேன். பின்னர் விலகினோம். தற்போது அவர் எனக்கு மன உளைச்சல் தருவதாக குறிப்பிட்டுள்ளார். இரண்டு காவல் நிலையங்களில் தனித்தனி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் காதலியின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் கே.சி.கரியப்பா, ‘‘யார் போதை மருந்து உட்கொண்டார்கள் என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்யட்டும். இந்த சவாலை ஏற்க தயாராக இருக்கிறேன். திஷா நிறைய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். நான் போதைப்பொருள் உட்கொள்வதாக கூறி எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி இது. அகமதாபாத் வந்ததும் எனது அறைக்கு போதைப்பொருள் கொண்டு வந்து உட்கொண்டார். அப்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாகவும், பெயரை கெடுத்துவிடுவதாகவும் கூறி மிரட்டினார். இதனை நான் எனது பாதுகாப்பிற்கு படம் பிடித்து வைத்துக்கொண்டேன் , என்றார்.
The post முன்னாள் காதலி குற்றச்சாட்டு எதிரொலி போதைக்கு நான் அடிமையா? மருத்துவ பரிசோதனைக்கு தயார்: கிரிக்கெட் வீரர் கே.சி.கரியப்பா அதிரடி; காதலிக்கு போதை பழக்கம் இருந்ததாக பதிலடி appeared first on Dinakaran.