சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி

ஜீயபுரம், டிச.25: சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 28ம் தேதி வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி நடைபெறுகிறது.இது குறித்து சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அர்த்தனாரி தெரிவித்துள்ளதாவது: சிறுகமணி வேளா ண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவிசாயிகளுக்கு பல்வேறு வகையான தொழில்நுட்ப பயிற்சிகள் செயல் விளக்கத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் நமது வீடுகளில் இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறிகளை ஆண்டு முழுவதும் பெறமுடியும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள், மகளிர் இவ்வலுவலக தொலைபேசி 0431-2962854 மற்றும் 91717 17832 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: