வேலையில்லா திண்டாட்டம், பெருகும் கடன் பற்றி பேசாமல் தமிழ்நாடு முதல்வரை விமர்சிப்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கபில் சிபல் கண்டனம்

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வரை விமர்சிக்காமல், பாஜ ஆட்சியில் பெருகி வரும் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசுங்கள் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கபில் சிபல் காட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது பற்றி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் விமர்சனத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கபில் சிபல் தன் ட்விட்டர் பதிவில், “இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வரை விமர்சிக்க வேண்டாம். உங்களுக்கு நேரமிருந்தால், தைரியமிருந்தால், பாஜவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பெருகி வரும் கடன், வேலையின்மை, குறைந்து வரும் வேலைவாய்ப்புகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், பசி, வறுமை கொடுமை, பாஜ எம்பி மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு இதைப்பற்றி பேசுங்கள்” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

The post வேலையில்லா திண்டாட்டம், பெருகும் கடன் பற்றி பேசாமல் தமிழ்நாடு முதல்வரை விமர்சிப்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கபில் சிபல் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: