அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளார் என்று வாதிட்டார். ஓ.எஸ்.மணியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதாரமற்ற புகார் கூறப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடந்திருந்தால் தேர்தல் ஆணையம் தடுத்திருக்கும். அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்காமல் இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தார். அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
The post ஓ.எஸ். மணியன் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.