முசிறி அருகே 8 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது

முசிறி, டிச.20: முசிறி அருகே உள்ள கோட்டூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (23). இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்குள் திடீரென சுமார் 8 அடி நீள சாரைப்பாம்பு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் முசிறி தீ தடுப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வீட்டிற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மூட்டை அருகில் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

The post முசிறி அருகே 8 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Related Stories: