மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டது. பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இப்பணிகள் காலை 11 மணி வரை நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பகல் 12 மணியளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை 6 மணி முதல் 12 மணி வரை என சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.
The post திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ஏழுமலையான் தரிசனம் 6 மணிநேரம் நிறுத்தம்: கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளிப்பு appeared first on Dinakaran.