பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக பெய்த கனமழை காரணத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்புப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்த்து வருகின்றோம். எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பாதித்துள்ளன. பாதித்த பகுதிகளில் இயன்றளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,”என்றார்.
The post வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்க்கிறோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.