தூத்துக்குடியில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது என்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூட்டாக பேட்டியளித்தனர். ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகராட்சியுடன் நேற்று முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. 2 அல்லது 3 நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும். மழை வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்ந்து தனித்தீவாக துண்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post தூத்துக்குடியில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: