ராம் துலாரின் வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் சிறுமியின் குடும்பத்துக்கு உதவி அளிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து ராம் துலார் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றவழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெறுகிறவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post சிறுமி பலாத்கார வழக்கில் உ.பி. பாஜ எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு ஜெயில் appeared first on Dinakaran.