இந்திய அணியில் சுப்மன் கில் (8), திலக் வர்மா (0) அடுத்தடுத்து விக்கெட் இழந்த போதிலும் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன் விளாசி ஆட்டமிழந்தார். சிக்சர் மழை பொழிந்த சூர்ய குமார் 55 பந்தில் சதம் அடித்தார்.
இவர் 56 பந்தில் 100 ரன் (8 சிக்சர், 7 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா குல்தீப் சுழலில் சிக்கி 13.5 ஓவரில் 95 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது. அதிகபட்சமாக மில்லர் 35 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 2.5 ஓவர் மட்டுமே வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது.
The post சூர்ய குமார் அதிரடி சதம்; குல்தீப் அபார பந்துவீச்சு தெ.ஆப்ரிக்காவை நொறுக்கியது இந்தியா: 3வது டி20ல் வென்று தொடரை சமன் செய்தது appeared first on Dinakaran.