மதுரை: மேலூர் அருகே அரசுப்பள்ளியில் மரத்தடியில் கல்வி பயின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்துள்ளது. மரம் வேரோடு சாய்ந்த விபத்தில் 17 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.