விசாரணையில், அந்த பெண் கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் காயத்ரிகோயில் பகுதியை சேர்ந்த ஸ்மிருதி (26) என்பதும், யஷ்வந்த்பூரில் இருந்து கோழிக்கோடு செல்வதற்காக ரயலில் பயணித்ததும், சேலத்தில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்ததும் தெரியவந்தது. அவரது இடது காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்ததால், ரயில்வே ஸ்டேஷனில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அடுத்து வந்த ரயிலில் ஸ்மிருதி மற்றும் உடன் வந்த 2 பேரை கோழிக்கோட்டிற்கு ஆர்பிஎப் போலீசார் அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்பிஎப் போலீஸ்காரர் அஜித்தை ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
The post ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த பெண்: காப்பாற்றிய ஆர்.பி.எப்.,வீரருக்கு பாராட்டு appeared first on Dinakaran.