உசிலம்பட்டி பகுதியில் கரும்பு விவசாயிகள் மானியம் பெறலாம்

 

உசிலம்பட்டி, டிச. 10: உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.7500 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிச. 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். அவர்கள் விதை கரும்பிற்காக நடவு செய்வதற்கு இந்த மானியம் பொருந்தும் என்பதுடன், முழு மானியம் பெறுவதற்கு கரும்பின் மகசூல் ஏக்கருக்கு குறைந்தது 36 டன் மற்றும் விதை கரும்பு வயல்களில் ஏக்கருக்குகுறைந்தது 23 டன் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு குறைவான மகசூல் பெரும் விவசாயிகளுக்கு மகசூலுக்கு ஏற்ப விகிதச்சார அடிப்படையில் மானிய தொகை வழங்கப்படும். கரும்புகளை வெட்டி ஆலைக்கு சப்ளை செய்த பிறகு மட்டுமே விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் விளைந்த கரும்பின் அளவிற்கு ஏற்ப மானியத்தொகை வழங்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்யலாம். மேலும், இயந்திரங்களை பயன்படுத்தி சாகுபடி மற்றும் அறுவடை செய்வதற்கு ஏதுவாக சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்து செலவுகளை குறைத்து கூடுதல் லாபம் பெற்று பயனடையலாம் என்று வேளாண் வளர்ச்சித்துறை கூறியுள்ளது.

The post உசிலம்பட்டி பகுதியில் கரும்பு விவசாயிகள் மானியம் பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: