சென்னை: செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 7.33 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.