தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். செம்பரம்பாக்கத்தில் உபரிநீர் திறப்பு, நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது; செம்பரம்பாக்கம் 2,500 கனஅடி நீர், பூண்டி ஏரியிலிருந்து 8,000 கனஅடி நீர், புழல் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர், சோழவரம் ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படுகிறது. என்று அவர் தெரிவித்தார்.
The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு, தண்ணீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் துரைமுருகன்..!! appeared first on Dinakaran.