இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் கீழ்ப்பாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே மழைநீரில் ருக்மாங்கரன் உடல் மிதப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ருக்மாங்கரன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியே சென்றவர் மழைநீரில் தடுமாறி விழுந்து இறந்தாரா அல்லது உடல் உபாதைகள் ஏதாவது உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மழைநீரில் மூழ்கி தலைமை காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.