அதேபோல தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கொண்டாட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் பட்டாசு வெடித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாநில செயலாளர் ரஞ்சித்குமார், மயிலை அசோக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்பி ரஞ்சன்குமார் தலைமையில் நடந்த கொண்டாட்டத்தில் கொண்டாட்டத்தில் அந்த வழியாக பஸ்ஸில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
The post 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு தமிழக பாஜ அலுவலகத்தில் கொண்டாட்டம்: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர் appeared first on Dinakaran.
