மிக்ஜம் புயல், கன மழை எச்சரிக்கை எதிரொலி கடலோர பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தஞ்சாவூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றம்

தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூரில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போக்குவரத்து போலீசார் நேற்று பறிமுதல் செய்து அதனை அழித்தனர். தஞ்சாவூர் நகர் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் சில பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. அதிக ஒலி எழுப்பப்படுவதால் பொதுமக்களுக்கு அது தொல்லையாக அமைகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினருக்கு பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளன. அந்த ஏர் ஹாரன்களால் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் அப்பகுதி வழியாக வந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் காவல்துறையினர் வழிமறித்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்ங்கள் கண்டறியப்பட்ட பேருந்துகளில் இருந்து அவை அகற்றப்பட்டன. தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பேருந்துகளின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன. மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் போக்குவரத்து காவல்துறையினர் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி கூறினர்.

மேலும் அவர்களிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,
இது முதன்முறை என்பதால் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டோம். மீண்டும் இதே நிலைமை நீடித்தால் ஏர்ஹாரன் உள்ள பேருந்துக்கள் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.

The post மிக்ஜம் புயல், கன மழை எச்சரிக்கை எதிரொலி கடலோர பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தஞ்சாவூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: