புளியங்குடி அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3பேர் கைது

கடையநல்லூர், டிச.2: புளியங்குடி வம்சவிருத்திநகர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த வேலு மனைவி மாரியம்மாள்(60). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்ற வாலிபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரை கொண்டு வந்த மாரியம்மாள் கதவை திறந்து வாலிபரிடம் தண்ணீரை கொடுத்துள்ளார். அப்போது வெளியே இருந்து வேகமாக வந்த மற்ற இரண்டு வாலிபர்கள், மாரியம்மாளிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க நகையை பறித்து விட்டு பைக்கில் ஏறி தப்பி விட்டனர். இது குறித்து மாரியம்மாள் சொக்கம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து நகையை பறித்துச்சென்ற புளியங்குடி கீழத்தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மகன் முஹம்மதுஆசிக்(26), காலாடி தெற்கு தெருவை சேர்ந்த மசூத் மகன் ரபீக்(28), சிதம்பரப்பேரி ஓடைத்தெரு நாகூர்கனி மகன் ஜாகிர்உசேன்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

The post புளியங்குடி அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: