காரைக்காலில் கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் பலி

 

காரைக்கால்,டிச.2: தஞ்சாவூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(55). இவர், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சித்திரவேலு (84) என்பவர், காரைக்கால் காமராஜர் சாலை, பிரபு நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த நவ.28ந் தேதி, தனது தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு, தஞ்சாவூரில் உள்ள தனது மனைவி மற்றும் மகனை காண பாஸ்கரன் சென்றுள்ளார்.

பின்னர் 30ம் தேதி காலை வழக்கம் போல், காரைக்கால் கல்லூரிக்கு வந்து, வேலைகளை முடித்துவிட்டு, மாலை வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் பல இடங்களில் தேடியும் தந்தை சித்திரவேலுவை காணவில்லை. தொடர்ந்து கழிவறையில் தேடிய போது சித்திரவேலு இறந்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு சுகர், பிரஷர் உள்ளிட்ட நோய்கள் இருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து, பாஸ்கரன், காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post காரைக்காலில் கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: