முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது

 

முத்துப்பேட்டை,டிச. 2: முத்துப்பேட்டை தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தில் அனுமதி இல்லாமல் மதுபான விற்பனை நடந்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதி சேர்ந்த வைகுண்டம் மகன் முத்து (51) என்பவர் டாஸ்மார்க் மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு அனுமதி என்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முத்து மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 16 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: