அம்பை, விகேபுரம் வீதிகளில் இருந்து வெளியேறும் அவலம் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

விகேபுரம்,டிச.1: அம்பை, விகேபுரம் நகராட்சி பகுதிகளில் வீதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் கலப்பதை தடுக்க வேண்டும் என நீரினை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அம்பை, விகேபுரம் நகராட்சி ஆணையாளர்களிடம், என்கே, எஸ்கே மற்றும் நதியுன்னி கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மாரிமுத்து கோரிக்கை மனு அளித்தார். மனு விவரம்: அம்பை, விகேபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது நேரடியாக நதியுன்னி கால்வாய், வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் கலக்கிறது. இதனால் கால்வாய் நீர் மாசுபடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கால்வாய் நீரின் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் குடிநீரும் மாசுபடுகிறது. எனவே, தெருக்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுத்திகரிப்பு செய்து கால்வாயில் விட ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

The post அம்பை, விகேபுரம் வீதிகளில் இருந்து வெளியேறும் அவலம் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: