தகவலறிந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக உயர் மின்னழுத்த மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், அப்பகுதிக்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள் உயர் மின்னழுத்த மின்சார கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வீடுகளுக்கு செல்லும் மின்சார வயரையும் சரி செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது, சேதமடைந்த மின் மீட்டர்களை மின்சார வாரியத்துறையே இலவசமாக வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்சாதனங்கள் பழுது appeared first on Dinakaran.