பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த போதை பொருளை எரிக்கும்போது வரும் புகையை சுவாசிப்பதால் போதை ஏற்படும் என்றும், இந்த பவுடரை திரவமாக்கி ஊசி மூலம் செலுத்துவதாலும் போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இருவரும் வட மாநிலங்களில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த வடமாநில தொழிலாளர்கள் கைது appeared first on Dinakaran.