அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி, எந்தவித சிக்னலும் கொடுக்காமல் இடதுபுறமாக திரும்பியது. இதனால் பின்னல் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி சந்தோஷ், தமிழன்பன், நரேன் யஸ்வந்த் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜசக், தஸ்வின் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த 2பேரை சிகிச்சைக்காகவும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர். தொடர்ந்து விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரி மீது கார் மோதல்; சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.