இறுதி சுற்றின் முடிவில் பந்தய இலக்கான 500 மீட்டரை தமிழக வீராங்கனைகள் எல்.ரித்திகா, எஸ்.ரக்ஷயா ஆகியோர் 2 நிமிடம், 2 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இப்பிரிவில் மேற்கு வங்க அணி (2 நிமிடம், 3.7 விநாடி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், 2 நிமிடம் 4.6 விநாடிகளில் இலக்கை கடந்த கேரளா அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவில் (சிடபிள்யூ1எக்ஸ்எப்1) மற்றொரு தமிழ் நாடு வீராங்கனை கே.பிரிதியுஷா 500 மீட்டர் தொலைவை 2 நிமிடம், 10.5 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த பிரிவில் தெலுங்கானாவின் கீர்த்தி ராம் வெள்ளி, சண்டீகரின் பிரியங்கா குமாரி வெண்கலமும் கைப்பற்றினர்.
The post இலகு ரக படகுப் போட்டி தங்கம் வென்ற ரித்திகா, ரக்ஷயா appeared first on Dinakaran.