சீனாவில் குழந்தைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், எச்9என்2 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பினால் ஏற்படும் பொது சுகாதார அவசரநிலைக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளதா என்பது பற்றி பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆலோசனை நடத்தியது. அப்போது சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் எச்9என்2, சுவாச நோய்களின் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அவசரநிலைக்கு நாடு தயார்நிலையில் இருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய்க்கு வழக்கமான காரணங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அசாதாரண நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத மருத்துவ அடையாளம் எதுவும் காணப்படவில்லை, என்றும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை பறவை காய்ச்சல் இந்தியா கண்காணிப்பு appeared first on Dinakaran.