எட்டயபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு

எட்டயபுரம், நவ. 24: எட்டயபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட மாநாடு நடந்தது. வட்ட தலைவர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துமாரி வரவேற்றார். எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா வாழ்த்திப் பேசினார். சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் நிறைவுரை நிகழ்த்தினார். வட்ட கிளை துணை தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் வட்ட பொருளாளர் மாரிமுத்து, இணை செயலாளர் முகமது நாசர், தாசில்தார் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியராஜ் செய்திருந்தார்.

The post எட்டயபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: