இதனால் வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டில் ஏற்றி வைத்த காமாட்சி அம்மன் விளக்கு எரிவதால் அதை அணைக்க உள்ளே சென்ற போது கேஸ் அதிகமாக கசிந்த காரணத்தினால் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் சேதம் அடைந்தது. மேலும் அப்போது வீட்டிற்குள் இருந்த பத்மாவதி, அம்மு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து காயமுற்றவர்களை அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க முதலில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து கேஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
படுகாயம் அடைந்த அந்த 3 பெண்களும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தராஜுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த தீ விபத்து நடந்திருப்பது அந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இடையே பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருத்தணியில் கேஸ் கசிவால் தீ விபத்து: 3 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.