இதை பார்த்து, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த காவலர் அனிதா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதுசம்பந்தமாக அவர் கொடுத்த புகாரின்பேரில், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய அரும்பாக்கம், அசோக நகர் பகுதியை சேர்ந்த பெயின்டர் வெங்கடேசன் (55) என்பவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சித்தல் (308) பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.
The post ஒருவழிப்பாதையில் வரக்கூடாது என்று எச்சரித்த பெண் காவலரை பைக் ஏற்றி கொல்ல முயற்சி: போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.