சிறப்பு பயிற்சிக் காலத்தில் அதிரடி திட்டம் நிறைவேற்றம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, மலைப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய கூட்டுப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், நீர்நிலை வழியே ஊடுருவல், தொலைதூர துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதல் ஆகியவற்றில் இரு தரப்பு அனுபவங்களும், தொழில்நுட்பங்களும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இருதரப்பு திறன், தொழில்நுட்பம் பரிமாற்றம் இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப்பயிற்சி: மேகாலயாவில் நேற்று தொடங்கியது appeared first on Dinakaran.