பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

பொன்னமராவதி,நவ.18: பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சி குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் பிராதான சாலையான வைரம்பட்டியில் இருந்து ஆர்.பாலகுறிச்சி வழியாக சீகம்பட்டி செல்லும் தார் சாலை போடப்பட்டு 10ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இதன் பின்னர் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாமல் குண்டும் குழியுமாக கிடக்கின்றது. இந்த சாலையில் செல்லும் பேரூந்துகள் மோசமாக சாலை உள்ளதால் இந்த வழித்தடத்தில் சரிவர பேருந்துகள் இயக்க மறுக்கின்றனர். மேலும் சாலை வழியாக இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வரமுடியாத அளவிற்கு குண்டும் குழியுமாகவும் ஜல்லிகள் பெயர்ந்து தார் இல்லாமல் ஜல்லிகளாகவே காணப்படுவதால் வண்டிகளின் டயர் வெடித்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள், அலுவலர்கள், கடைகளுக்கு செல்வோர், சந்தைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையில் தினசரி சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே வைரம்பட்டி-ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி சாலையினை காலம் தாழ்த்தாமல் புதிதாக தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: