பெரியார் பல்கலை. ஆளுநர் நிகழ்ச்சியில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வரும் 24ம் தேதி காலை நடக்கிறது. முன்னதாக, 23ம் தேதி மாலை பல்கலைக்கழக கூட்ட அரங்கில், ஜி20 மாநாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உயர்கல்வித்துறையின் எந்தவித அனுமதியும் இன்றி, துணைவேந்தர் ஜெகநாதன் தன்னிச்சையாக இந்த விழாவை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் துணைவேந்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post பெரியார் பல்கலை. ஆளுநர் நிகழ்ச்சியில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: