இதுமட்டுமின்றி இந்த ஆலமரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. இதனால் வவ்வால்கள், பறவைகள் பறந்து சென்று விடக்கூடாது என்பதற்காக காலம் காலமாக இந்த பகுதியில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழந்தின்னி வவ்வால்கள் விவசாயத்துக்கு உதவுகிறது. எனவே அவற்ற காக்க பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை என்றனர்.
The post மயிலாடுதுறை அருகே வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமம் appeared first on Dinakaran.