இந்நிலையில் விதிகளை மீறி பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம் என்று தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், பாதுகாப்பான தீபாவளிக்கு ரயில் பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்ல வேண்டாம்: விதியை மீறினால் கடும் நடவடிக்கை.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.