மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவவிழா திருக்கொடியேற்றம்

 

மயிலாடுதுறை, நவ.8: மயிலாடுதுறையில் நேற்று திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவவிழா திருக்கொடியேற்றம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை வேளப்பதம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. . இதில் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத வாச்சாரியார், கார்த்தகார் சங்க பொறுப்பாளர்கள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, தொழிலதிபர்கள் விஜயகுமார், ராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர் தருமை ஆதீன கட்டளை விசாரணை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதேபோல் தெப்பக்குளம் காசிவிஸ்வநாதர், மாரக்கெட் காசிவிஸ்வநாதர் கோயிலிகளில் துலா உற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

The post மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவவிழா திருக்கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: