மதுரை, மே 28: மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2025-26ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளிகளை கவுரவிக்கும் வகையில் நற்சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
ஞானஒளிவுபுரம் ஆர்.சி. ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சிவக்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான்சி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வாணி நன்றி கூறினார். இதில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கி கவுரவித்தார். இதில் ஏராளமான பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
