தொழிலாளி தற்கொலை

மதுரை, மே 28: மதுரை, தத்தனேரி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து(42). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு ெசய்து பல்வேறு இடங்களிலும் பெண் பார்த்தனர். ஆனால் ஜாதக தோஷம் காரணமாக இவருக்கு திருமணம் கைகூடாமல் போனது.

இதனால் மனவேதனை அடைந்த இசக்கிமுத்து,மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதற்கிடையே குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனார். இதனால் வேதனையடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தருகின்றனர்.

 

Related Stories: